செய்திகள் மலேசியா
காலுறையில் அல்லாஹ் வார்த்தை பொறிக்கப்பட்ட விவகாரம்; ஜொகூரில் காவல்துறையினர் சோதனை
ஜொகூர் பாரு:
காலுறையில் அல்லாஹ் எனும் வார்த்தை பொறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட காலுறையைத் தயாரித்து விநியோகம் செய்யும் ஒரு தொழிற்சாலையை மாநில காவல்துறையினர் சென்று சோதனை நடத்தினர்.
சுமார் 40 காவல்துறை அதிகாரிகளும் XIN JIAN CHANG நிறுவனத்திற்குச் சென்று சோதனைகளை மேற்கொண்டதாக பத்து பஹாட் மாவட்ட காவல்துறை தலைவர் துணை கமிஷ்னர் இஸ்மாயில் டோலா கூறினார்.
அல்லாஹ் வார்த்தையைப் பொறிக்கப்பட்ட காலுறை ஐந்து ஜோடிகளைக் காவல்துறையினர் சோதனைக்குப் பின் பறிமுதல் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.
காவல்துறையினர் விசாரணைகள் மேற்கொண்டதில் சர்ச்சைக்குரிய காலுறைகள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிறுவனமானது அதனை அடுக்கி பைக்களில் வைக்கும் பணிகளை மட்டுமே மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டார் .
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வேறு எந்தவொரு காலுறைகளிலும் அல்லாஹ் வார்த்தை பொறிக்கப்படவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 10:15 pm
சோம்பேறி, ஒழுங்கு பிரச்சினை உள்ள அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: பிரதமர்
May 5, 2024, 10:13 pm
அன்வாரை ஆதரிக்கும் 6 பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவியை இழக்கலாம்: மொஹைதின்
May 5, 2024, 10:12 pm
நஜீப்பை விடுவிக்க பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன: ஜாஹித்
May 5, 2024, 10:11 pm
பிரதமருக்கு எதிராக சமூக மக்களை தூண்டிவிடும் இந்தியத் தலைவர்கள்: டத்தோ ரமணன் சாடல்
May 5, 2024, 10:10 pm
ஆய்வு ரீதியிலான படைப்புகள் அதிகம் உருவாக வேண்டும்: டத்தோஶ்ரீ சரவணன்
May 5, 2024, 10:09 pm
நீரில் மூழ்கிய தந்தையும் இரு பிள்ளைகளும் மரணம்: பத்தாங்காலியில் சம்பவம்
May 5, 2024, 10:08 pm
சிலாங்கூர் கால்பந்து வீரர் மீது ஆசீட் வீச்சு
May 5, 2024, 4:50 pm