நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அமைச்சர்களின் விருப்பத்திற்கேற்ப செயல்பட நான் அவர்களின் பொம்மையல்ல: மாமன்னர்

கோலாலம்பூர்:

மக்கள், நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதோடு மலாய் ஆட்சியாளர்களின் நம்பிக்கையைச் சுமக்கும் பொறுப்பு தமக்கு உள்ளதாக மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். 

தனது "தேன்நிலவு" காலம் முடிந்தவுடன், தன்னுடைய உண்மையான ஆட்சிமுறையைச் செயல்படுத்தப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், அமைச்சர்களின் விருப்பத்திற்கேற்ப செயல்பட தாம் அவர்களின் பொம்மையல்ல என்றும் சுல்தான் இப்ராஹிம் எச்சரித்துள்ளார். 

இன்னும் இரு வாரங்களில் தாம் மாமன்னராகப் பொறுப்பேற்று இரண்டு மாதங்கள் ஆகிவிடும் நிலையில் இந்த தேனிலவு காலம் முடிந்ததும் தனது உண்மையான ஆட்சி முறை தொடங்கும் என்று அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset