செய்திகள் மலேசியா
ரிங்கிட்டின் நிலையை வலுப்படுத்தும் திட்டமில்லை: அமீர் அம்சா
கோலாலம்பூர்:
தற்போது மலேசிய ரிங்கிட்டின் நிலையை வலுப்படுத்தும் அரசாங்கம் திட்டமிடவில்லை என்று நிதியமைச்சர் அமீர் ஹம்சா அசிசான் தெரிவித்தார்.
1998-ஆம் ஆண்டு மலேசிய ரிங்கிட்டின் நிலை வலுப்படுத்தப்பட்ட நடவடிக்கையானது அப்போதைய பொருளாதார நிலைக்கு ஏற்றது. அதனையே தற்போதிருக்கும் பொருளாதாரச் சூழலுக்கு அமல்படுத்த இயலாது என்று அவர் கூறினார்.
1998-ஆம் ஆண்டின் பொருளாதார நிலையைப் பொறுத்தவரை, அப்போதைய பங்குச் சந்தை 76% வீழ்ச்சியடைந்தது.
தற்போது இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து பங்குச் சந்தை 6% உயர்ந்துள்ளது.
கூடுதலாக, 1998-ஆம் ஆண்டில் இல் வெளிநாட்டிலிருந்து கடன் வாங்குவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 16% ஆக இருந்தது.
தற்போது வெளிநாட்டிலிருந்து கடன் வாங்குவது 1-2% விடுக்காடாக மட்டுமே உள்ளது.
மேலும், பேங் நெகாராவின் கையிருப்பில் சுமார் 13 பில்லியன் ரிங்கிட் இருக்கின்றது.
இந்நிலையில், ரிங்கிட்டை வலுப்படுத்தும் நடவடிக்கையைத் தற்போது கையாள வேண்டிய அவசமில்லையென்றும் ரிங்கிட் நிலையைச் சமாளிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினைக்கு தீர்வு மே 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு?
May 2, 2024, 1:22 pm
42 ஆண்டுகளுக்குப் பிறகு 78 வயதில் மூதாட்டி மீண்டும் காதல் திருமணம்
May 2, 2024, 1:00 pm