செய்திகள் மலேசியா
இந்தியர்களுக்கான 2,500 மெட்ரிகுலேஷன் இடங்கள் பிரதமருக்கான ஆதரவைப் பாதிக்காது: செனட்டர் சிவராஜ்
கோலாலம்பூர்:
இந்தியர்களுக்கான 2,500 மெட்ரிகுலேஷன் இடங்கள் வழங்கப்படுவது பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாருக்கான ஆதரவைப் பாதிக்காது.
மேலவையில் செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் இதனை வலியுறுத்தினார்.
இந்திய சமூகத்திற்கு 2,500 மெட்ரிகுலேஷன் இடங்களை வழங்குவதன் மூலம் இந்தியர்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான தனது அர்ப்பணிப்பை பிரதமர் காட்ட வேண்டும்.
மேலும் இதனால் மலாய்க்காரர்களிடமிருந்து ஆதரவை இழக்க நேரிடும் என்று பிரதமர் பயப்படக் கூடாது.
பிரதமர் என்ற முறையில் அவர் அனைத்து இன மக்களுக்கும் நியாயமான, சமமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
இந்திய சமூகத்திற்கு பிரதமர் உதவினால் சீன, மலாய் சமூகத்தினர் கூட மகிழ்ச்சி அடைவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்தியர்களுக்கு உதவுவதால் சீன, மலாய் சமூகங்கள் உங்களுக்கு ஆதரவளிப்பதை எந்த வகையிலும் பாதிக்காத என்பதை நான்ன் உறுதியாக நம்புகிறேன்.
இந்திய சமூகத்திற்கு 2,500 இடங்களை வழங்குவது அவர்கள் சிக்கியுள்ள வறுமையின் தீய சுழலில் இருந்து அவர்களை மீட்டெடுக்க முடியும் என்று டத்தோ சிவராஜ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினைக்கு தீர்வு மே 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு?
May 2, 2024, 1:22 pm
42 ஆண்டுகளுக்குப் பிறகு 78 வயதில் மூதாட்டி மீண்டும் காதல் திருமணம்
May 2, 2024, 1:00 pm