நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நம்பிக்கை, டத்தோஶ்ரீ ஜியுடன் இணைந்து ஊடகங்களைச் சேர்ந்த பெண்களை கௌரவித்தது

பூச்சோங்:

நம்பிக்கை ஊடகக் குழுமம், டத்தோஶ்ரீ ஜியுடன் இணைந்து ஊடகங்களில் பணியாற்றும் பெண்களை கௌரவித்தது.

உலக மகளிர் தினம் அண்மையில் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு ஊடகங்களில் பணியாற்றும் பெண்களை கௌரவிக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யபட்டது.

பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி, இணைய ஊடகம் உட்பட அனைத்து ஊடகங்களில் இருந்தும் 50க்கும் மேற்பட்ட பெண்மணிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No photo description available.

இந்நிகழ்ச்சியில் முக்கிய அங்கமாக  நாட்டில் ஊடகத் துறையில் நீண்ட காலம் பணியாற்றிய மூவர் சிறப்பிக்கப்பட்டனர்.

தொலைக்காட்சி முன்னாள் செய்தி வாசிப்பாளர் எஸ்.பி.பாமா, மலேசிய நண்பன் இணை ஆசிரியர் ராஜேஸ்வரி கணேசன், அநேகன் ஆசிரியர் தா.சரளா தேவி ஆகியோரே அந்த மூவர்.

பெண்களின் சிறப்புகளை எடுத்துக் கூறும் அதே சமயத்தில் அவர்கள் என்றும் போற்றப்படக்கூடியவர்கள் என்பதை வலியுறுத்தும் இந்த நிகழ்ச்சியைச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்தமைக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அனைவரும் நன்றி கூறினர்.

இந்நிகழ்வில் பிரபல வர்த்தகர் டத்தோஶ்ரீ ஜி, நம்பிக்கை இணைய ஊடகத்தின்  தலைமை செயல்முறை அதிகாரி சுஹைனா, தலைமை மேலாளர் தயாளன் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset