செய்திகள் மலேசியா
நம்பிக்கை, டத்தோஶ்ரீ ஜியுடன் இணைந்து ஊடகங்களைச் சேர்ந்த பெண்களை கௌரவித்தது
பூச்சோங்:
நம்பிக்கை ஊடகக் குழுமம், டத்தோஶ்ரீ ஜியுடன் இணைந்து ஊடகங்களில் பணியாற்றும் பெண்களை கௌரவித்தது.
உலக மகளிர் தினம் அண்மையில் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு ஊடகங்களில் பணியாற்றும் பெண்களை கௌரவிக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யபட்டது.
பத்திரிக்கை, வானொலி, தொலைக்காட்சி, இணைய ஊடகம் உட்பட அனைத்து ஊடகங்களில் இருந்தும் 50க்கும் மேற்பட்ட பெண்மணிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முக்கிய அங்கமாக நாட்டில் ஊடகத் துறையில் நீண்ட காலம் பணியாற்றிய மூவர் சிறப்பிக்கப்பட்டனர்.
தொலைக்காட்சி முன்னாள் செய்தி வாசிப்பாளர் எஸ்.பி.பாமா, மலேசிய நண்பன் இணை ஆசிரியர் ராஜேஸ்வரி கணேசன், அநேகன் ஆசிரியர் தா.சரளா தேவி ஆகியோரே அந்த மூவர்.
பெண்களின் சிறப்புகளை எடுத்துக் கூறும் அதே சமயத்தில் அவர்கள் என்றும் போற்றப்படக்கூடியவர்கள் என்பதை வலியுறுத்தும் இந்த நிகழ்ச்சியைச் சிறந்த முறையில் ஏற்பாடு செய்தமைக்காக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அனைவரும் நன்றி கூறினர்.
இந்நிகழ்வில் பிரபல வர்த்தகர் டத்தோஶ்ரீ ஜி, நம்பிக்கை இணைய ஊடகத்தின் தலைமை செயல்முறை அதிகாரி சுஹைனா, தலைமை மேலாளர் தயாளன் சண்முகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 1:22 pm
42 ஆண்டுகளுக்குப் பிறகு 78 வயதில் மூதாட்டி மீண்டும் காதல் திருமணம்
May 2, 2024, 1:00 pm
ஸ்கூடாய் ஆற்றில் விழுந்த ஆட்டிசம் குறைப்பாடு கொண்ட சிறுவன் நீரில் மூழ்கி மரணம்
May 2, 2024, 12:28 pm
மாமன்னருக்கு எதிராக அவதூறு பதிவை வெளியிட்ட பாபாகோமோ குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
May 2, 2024, 10:16 am
இந்திய சமூகம் அரசாங்கத்தை வெறுக்கத் தூண்ட முயற்சிப்பதற்கு சுயநலமே காரணம்: பிரதமர்
May 2, 2024, 10:08 am
ஷாஆலமில் வழிப்பறித் திருடனைத் துரத்திப்பிடித்த நிறைமாதக் கர்ப்பிணி
May 2, 2024, 10:07 am