செய்திகள் மலேசியா
டிரெய்லரை மோதிய விரைவுப் பேருந்து தீப்பற்றியது: ஓட்டுநர் மரணம்
குரூண்:
டிரெய்லரை மோதிய விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் ஓட்டுநர் கருகி மாண்டார்.
இந்தச் சம்பவம் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையின் கிலோ மீட்டர் 75.2 இல் கெடா குரூண் அருகில் நிகழ்ந்தது.
இன்று அதிகாலை 4.02 மணிக்கு நிகழ்ந்த சம்பவம் தொடர்பில் தீயணைப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
உடனே தீயணைப்புப் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்து நடந்த இடத்தில் கடுமையாக போராடி தீயை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தில் பேருந்து ஓட்டுநரான 42 வயது ஆடவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
அதே வேளையில் பேருந்து உதவியாளர், 4 பயணிகள், டிரெய்லர் ஓட்டுநர் ஆகியோர் உயிர் தப்பினர்.
இதனை குவார் செம்படாக் தீயணைப்புப் படைத் தலைவர் முஹம்மத் பௌசி ரசாலி உறுதிப்படுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 1:22 pm
42 ஆண்டுகளுக்குப் பிறகு 78 வயதில் மூதாட்டி மீண்டும் காதல் திருமணம்
May 2, 2024, 1:00 pm
ஸ்கூடாய் ஆற்றில் விழுந்த ஆட்டிசம் குறைப்பாடு கொண்ட சிறுவன் நீரில் மூழ்கி மரணம்
May 2, 2024, 12:28 pm
மாமன்னருக்கு எதிராக அவதூறு பதிவை வெளியிட்ட பாபாகோமோ குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்
May 2, 2024, 10:16 am
இந்திய சமூகம் அரசாங்கத்தை வெறுக்கத் தூண்ட முயற்சிப்பதற்கு சுயநலமே காரணம்: பிரதமர்
May 2, 2024, 10:08 am
ஷாஆலமில் வழிப்பறித் திருடனைத் துரத்திப்பிடித்த நிறைமாதக் கர்ப்பிணி
May 2, 2024, 10:07 am