செய்திகள் மலேசியா
அனைத்துத் தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் சீனி நைனா முகமது எழுதிய தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
அனைத்துத் தமிழ் சார்ந்த நிக்ழ்ச்சிகளிலும் சீனி நைனா முகமது எழுதியுள்ள தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் ஒலிக்க வேண்டும் என்று மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தயாரிப்பிலான, சீனி நைனா முகமது எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலின் புதிய காணொலி, சிறுகதை நூல் வெளியீட்டு விழாவைத் தலைமையேற்றுத் தொடக்கி வைத்தார்..
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வார் என்பதைக் கருத்தில் கொண்டு மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அர்த்தம் புரிந்து பாட வேண்டும்.
ஆழமான சொற்கள் கொண்ட பொருள் பொதிந்த பாடல் அது.
அனைத்துத் தமிழ் சார்ந்த நிக்ழ்ச்சிகளிலும் இந்தப் பாடல் ஒலிக்க வேண்டும்.
பாடலின் வரலாற்றைக் கேட்கும் பொழுது வரலாறு எவ்வளவு முக்கியம் என்பதை இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
இம் முயற்சியை மேற்கொண்ட எழுத்தாளர் சங்கத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
தலைநகரில் நடைபெற்ற இந்நிகழ்வில் இஸ்லாமிய கல்வி வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முகமது இக்பால், எழுத்தாளர் சங்கத் தலைவர் ஞான சைமன், தேசிய நில நிதி கூட்டுறவு நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டத்தோ சகாதேவன், தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் அயலகத் தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm
உலுசிலாங்கூரின் 5 தோட்டப் பிரச்சினைக்கு தீர்வு மே 9ஆம் தேதி முக்கிய அறிவிப்பு?
May 2, 2024, 1:22 pm
42 ஆண்டுகளுக்குப் பிறகு 78 வயதில் மூதாட்டி மீண்டும் காதல் திருமணம்
May 2, 2024, 1:00 pm