நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சத்து தலைவர்கள்  கெஅடிலானில் இணைந்தால் நம்பிக்கை கூட்டணி ஆதரவை இழக்கும்: குவான் எங்

கோலாலம்பூர்:

பெர்சத்துவை விட்டு வெளியேறிய உயர் தலைவர்கள் கெஅடிலானில் இணைந்தால் அது நம்பிக்கை கூட்டணியின் ஆதரவை குறைக்கும்.

ஜசெக தலைவர் லிம் குவான் எங் இதனை தெரிவித்தார்.

பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் செயல் திறனில் தேசிய கூட்டணி ஆதரவாளர்கள் கவனம் செலுத்த வேண்டு.

நம்பிக்கை கூட்டணிக்கான ஆதரவு பொருளாதார செயல்திறன், சீர்திருத்தங்கள், அரசியல் நிலைத்தன்மை அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் ஆகியவற்றில் அதிகம் சார்ந்துள்ளது.

எதிர்க்கட்சியில் இருந்து நீங்கள் யாரை உறுப்பினராக ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதை விட இவை மிகவும் முக்கியம் என்று அவர்   செய்தியாளர்களிடம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset