நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காணாமல் போன 12 வயது மாணவி: குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களிடம் வாக்குமூலம் பதிவு

பெட்டாலிங் ஜெயா: 

12 வயது பள்ளி மாணவி காணாமல் போன வழக்கில் இதுவரை ஐவரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் சித்தி தியா பத்ரிசியா சைரில் அனுவாரின் 
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமிருந்து வாக்குமூலம் பெற்றுள்ளதாக டாங் வாங்கி காவல்துறைத் தலைவர் நூர் டெல்ஹான் யஹாயா தெரிவித்துள்ளார்.

இதுவரை, மாணவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர் மேற்கோள் காட்டினார். 

தாயார் திட்டியதையடுத்து மாணவி செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டு வெளியேறியதாக அவரின் தாயார்  சியாரிபா ரோஸ்பாசிலா சையத் முகமட் ஃபாசிலி தெரிவித்துள்ளார். 

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset