நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரீச்சம் பழத்தை வெண்ணெயுடன் சாப்பிடுவதில் எந்தச் சுகாதாரச் சிக்கலும் இல்லை: சுகாதார அமைச்சர்

புத்ராஜெயா:

வெண்ணெயுடன் பேரீச்சம்பழம் சாப்பிடும் பழக்கம், அதை அளவாக எடுத்துக் கொள்ளும் வரை உடல்நலத்திற்கு எந்த விதமான சுகாதார பிரச்சனைகளும் ஏற்படாது. 

ஆரோக்கியமான உணவுப் பழக்கமானது நாம் எடுத்துக் கொள்ளும் உணவு பொருட்களை அடிப்படையாகக் கொண்டதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அஹம்மத் தெரிவித்தார்.

தன்னைப் பொறுத்தவரை, உணவு விஷயத்தில் சரியான உணவைச் சரியான அளவோடு இருப்பதை உறுதி செய்வதாக அவர் தெரிவித்தார். 

பேரிச்சம் பழமும் வெண்ணெய்யும் உடல்நலத்திற்கு நல்லது என்றால் அதனைச் சரியான அளவில் உட்கொள்ள வேண்டும் என்று தற்போது வெண்ணெயுடன் பேரீச்சம்பழம் சாப்பிடும் வழக்கமானது மலேசியர்கள் மத்தியில் அதிகமாகுவதைக் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset