நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப் மன்னிப்பு விவகாரத்தில் கருத்து தெரிவிக்க ஷாபி மறுத்து விட்டார்

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக்கின் மன்னிப்பை சவால் செய்யும் மனு குறித்து கருத்து தெரிவிக்க முஹம்மது ஷாஃபி அப்துல்லா மறுத்துவிட்டார்.

நஜீப்பின் மன்னிப்பு மனு குறித்து நாளை நடைபெறவுள்ள மலேசிய வழக்கறிஞர்களின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

தானோ அல்லது தனது கட்சிக்காரரோ இந்த விவகாரத்தில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை ஷாஃபி அப்துல்லாஹ் என்றார்..

இது நாளை நடைபெறவுள்ள மலேசிய வழக்கறிஞர்களின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

மலேசிய வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஜைனூர் ஜகாரியா மனுவை தாக்கல் செய்யவுள்ளார்.

மன்னிப்பு வாரியத்தின் முடிவை வழக்கறிஞர் மன்ற முன்னாள் தலைவரின் மனு சவால் செய்கிறது.  

மன்னிப்பு வாரியம், நஜிப் ரசாக் ஆகியோருக்கு எதிராக நீதித்துறை மறுஆய்வு நடவடிக்கைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்பதே இம் மனுவின் இதன் முக்கிய நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset