நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் மாநில குடியிருப்பாளர்கள் மாவட்ட போலிஸ் தலைவர்களை மார்ச் 23ஆம் தேதி சந்திக்கலாம்

சுங்கைபூலோ:

சிலாங்கூர் மாநில குடியிருப்பாளர்கள் மாவட்ட போலீஸ் தலைவர்களை வரும் மார்ச் 23ஆம் தேதி நேரில் சந்திக்கலாம்.

சிலாங்கூர் மாநில போலிஸ் தலைவர் ஹுசைன் ஓமார் கான் கூறினார்.

இவ்வாண்டுக்கான போலிஸ் தினம் வரும் மார்ச் 25ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இத் தினத்தை  அடிப்படையாகக் கொன்டு மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்ட காவல்துறை தலைமையகத்திலும் மார்ச் 23ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறும்.

அன்றைய தினம் குடியிருப்பாளர்கள் மாவட்ட போலிஸ் தலைவர்களை சந்திக்கலாம்.

போலிஸ், பாதுகாப்புப் பிரச்சினைகள் குறித்த தங்கள் கவலைகளையும் பிரச்சினைகளையும் அந்தந்த காவல்துறைத் தலைவர்களிடம் நேரடியாகக் கூறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தரப்படும்.

குறிப்பாக போலிஸ் பற்றிய தங்கள் கவலைகளை மக்கள் நேரடியாக தலைமையிடம் தெரிவிக்கும் வழிகளில் இதுவும் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset