செய்திகள் மலேசியா
12 வயது மாணவி மார்ச் 12ஆம் தேதி முதல் காணவில்லை: காவல்துறை
கோலாலம்பூர்:
12 வயது மாணவி ஒருவர் கடந்த மார்ச் 12ஆம் தேதி முதல் காணவில்லை என காவல்துறைக்கு புகார் கிடைத்துள்ளது.
இதனை டாங் வாங்கி போலிஸ்படையின் உதவி ஆணையர் நூர் டெல்ஹான் யஹ்யா உறுதிப்படுத்தினார்.
காணாமல் போன மாணவி பெயர் சித்தி தியா பத்ரிசியா. அவர் இதுவரை வீடு திரும்பவில்லை.
இதனைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
இப் புகாரின் அடிப்படையில் போலிசார் தேடுதல் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
மாணவியை பார்ப்பவர்கள் உடனடியாக போலிசுக்கு தகவல் கொடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm