செய்திகள் மலேசியா
அதிக விலையில் உணவுகளை விற்கும் வர்த்தகர்களைப் புறக்கணியுங்கள்: அமைச்சர் எச்சரிக்கை
புத்ராஜெயா:
அதிக விலையில் உணவுகளை விற்கும் வியாபாரிகளைப் புறக்கணிக்கும் அதிகாரம் பயனீட்டாளர்களுக்குள்ளது என்று உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணை அமைச்சர் புஸியா சாலே கூறினார்.
ரமலான் சந்தைகளில் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகமாகவுள்ளது.
அதிக விலையை நிர்ணயிக்கும் வர்த்தகர்களிடம் பொருள்களை வாங்குவதைப் பயனீட்டாளர்கள் தவிர்க்கலாம் என்று அவர் கூறினார்.
உணவு விலை அதிகரிப்பு தொடர்பான புகார்கள் கிடைக்கப்பெற்றாலும் வர்த்தகர்கள் அதிக லாபம் ஈட்டுவது, நியாயமற்ற விலை உயர்வைச் சுமத்துவதைத் தடுப்பதில் அமைச்சு உறுதியாகவுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
வர்த்தகர்கள் தங்கள் உணவுப் பொருள்களின் விலைகளைக் குறைக்க பயனீட்டாளர்கள் கட்டாயப்படுத்த முடியும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
ரமலான் சந்தைகளில் முர்தாபாக் உணவு விலை உயர்வை உதாரணம் காட்டிய அவர், இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும் வெங்காயம் போன்ற மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக அதன் விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்றார்.
உணவுப் பொருள் விலையேற்றம் தொடர்பில் அமைச்சு 126 புகார்களைப் பெற்றுள்ளதாகவும் 11 புகார்கள் மீது அது விசாரணைகளைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:37 pm
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am