செய்திகள் மலேசியா
இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் வயது வரம்பு 60 ஆக உயர்த்தப்படும்: ஸ்டீவன் சிம்
கோலாலம்பூர்:
இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் பங்கேற்பவர்களின் வயது வரம்பு 55 வயதிலிருந்து 60 ஆக உயர்த்தப்படும்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை தெரிவித்தார்.
இந்த நடவடிக்கைக்கு தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் தேவைப்படுகிறது.
அத்திருத்தம் விரைவாக செய்து இப்புதிய நடைமுறை இந்த ஆண்டு அமலுக்கு வரும் என்று அவர் கூறினார்.
இல்லத்தரசிகளுக்கு ஓய்வு பெறும் வயது கிடையாது. சொக்சோ திட்டத்தில் உள்ளதைப் போலவே தொழிலாளர் சட்டத்திலும் அதை சீரமைப்போம்.
குறிப்பாக வயது வரம்பு 55இல் இருந்து 60 ஆண்டுகளாக மாற்றப்படும் என்று அவர் கூறினார்.
இல்லத்தரசிகளுக்கான சமூகப் பாதுகாப்பு அமைப்பின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் 720,000க்கும் மேற்பட்ட பெண்கள் பாதுகாப்பு வழங்கப்படும்.
கடந்தாண்டு மே 30ஆம் தேதியன்று, முன்னாள் மனிதவள அமைச்சர் வி சிவக்குமார்,
முந்தைய ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 176,000 இல்லத்தரசிகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
2023இல் அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட 500,000 இலக்கில் 35% இல்லத்தரசிகள் மட்டுமே இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.
பொருளாதாரம் அல்லது மற்ற துறையில் பணி புரியும் பெண்களை அங்கீகரிப்பதை அமைச்சு நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்தாண்டின் 200,000 இல்லத்தரசிகளை விட இத்திட்டத்தின் கீழ் 500,000 பேருக்கு பாதுகாப்பு வழங்குவதே அமைச்சின் இந்த ஆண்டு இலக்கு என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:37 pm
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am