செய்திகள் மலேசியா
வயது முதிர்ந்த மக்களை பாதுகாக்க அரசாங்கத்தின் திட்டம் என்ன?: மக்களவையில் டத்தோஶ்ரீ சரவணன் கேள்வி
கோலாலம்பூர்:
நாட்டில் வயது முதிர்ந்த மக்களை பாதுகாக்க அரசாங்கத்தின் திட்டங்கள் என்னவென்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம். சரவணன் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
மக்களவையில் மனிதவள அமைச்சரின் கூடுதல் கேள்வி நேரத்தில் பேசிய அவர், வரும் 2030 ஆண்டில் நாட்டில் அதிகமான வயது முதிர்ந்த மக்கள் வாழும் நாடாக மலேசியா விளங்கும்.
தற்போது தொழிலாளர்களாக இருக்கும் அவர்கள் வயது முதிர்ந்த பின் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
அவர்களை பாதுகாக்கும் வகையில் அரசாங்கம் என்னென்ன திட்டங்களை கொண்டிருக்கிறது என்பது என்னுடைய கேள்வியாகும்.
அப்படி திட்டங்கள் இல்லையென்றால் மனிதவள அமைச்சு அத் திட்டங்கள் குறித்து உரிய ஆய்வுகளை நடத்த வேண்டும் என்று டத்தோஶ்ரீ சரவணன் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 11:34 pm
நம்பிக்கையை இழந்த சீன மக்கள் அச்சத்தால் ஜசெகவுக்கு வாக்களிக்கின்றனர்: வீ கா சியோங் சாடல்
May 7, 2024, 5:58 pm
நராதிவாட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 மலேசியர்கள் காயமடைந்தனர்
May 7, 2024, 5:52 pm
கோல குபு பாரு இடைத் தேர்தலின் வாக்குப் பதிவு 75 சதவீதத்தை எட்டும்: தேர்தல் ஆணையம்
May 7, 2024, 5:10 pm