செய்திகள் மலேசியா
கெவின் மொராய்ஸ் கொலை வழக்கில் ஆறு பேரின் மரணத் தண்டனை மேல்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது
புத்ராஜெயா:
ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு அரசுத் துணை வழக்கறிஞர் டத்தோ அந்தோணி கெவின் மொராய்ஸ் கொலை வழக்கில் 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிலை நிறுத்தியது.
முன்னாள் நோயியல் நிபுணர், கர்னல் டாக்டர் ஆர் குணசீகரன், கடன் கொடுத்த எஸ்.ரவி சந்திரன், நான்கு வேலையற்றவர்களான ஆர். தினீஸ்வரன், ஏ.கே. தினேஷ் குமார், எம் விஸ்வநாத், எஸ். நிமலன் ஆகியோரே குற்றம் நிருபிக்கப்பட்ட அந்த 6 பேராகும்.
தலைமை நீதிபதி டத்தோ ஹட்ஹரியா சைட் இஸ்மாயில், நீதிபதிகள் டத்தோ அஹ்மத் ஜைய்டி இப்ராஹிம், டத்தோ அஸ்மி ஆரிபின் ஆகியோர் அடங்கிய நீதிபதி குழு ஒருமனதாக முடிவெடுத்தது.
கடந்த 2020 ஜூலை 10ஆம் தேதி அன்று கெவின் மொராய்ஸ் கொலை செய்ததாகக் கண்டறியப்பட்ட பின்னர், உயர் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட 6 பேருக்கும் மரண தண்டனை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2024, 11:00 am
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பள்ளத்தில் விழுந்தது: மூவர் மரணம், நால்வர் காயம்
May 6, 2024, 11:00 am
இந்திய வாக்காளர்கள் தைரியமாக தேசிய கூட்டணிக்கு ஆதரவு வழங்குகின்றனர்: ஹம்சா சைனுடின்
May 6, 2024, 11:00 am
லாஹாட் டத்துவில் நீரில் மூழ்கிய மூவர் மரணம்: மூவர் காணவில்லை
May 6, 2024, 10:54 am
பைசல், அக்யார் மீதான தாக்குதல்: துங்கு இஸ்மாயில் கண்டனம்
May 6, 2024, 10:53 am
பைசல் ஹலீம் மீதான தாக்குதலை முழுமையாக விசாரிக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
May 6, 2024, 10:52 am
கோல குபு பாரு இடைத் தேர்தல்; 863 போலீஸ், ராணுவ வீரர்கள் நாளை வாக்களிக்கவுள்ளனர்
May 6, 2024, 10:49 am
கிளந்தானில் மூன்று மூத்த அரசு நிறுவன அதிகாரிகளை எம்ஏசிசி கைது செய்துள்ளது
May 6, 2024, 10:03 am