செய்திகள் மலேசியா
கோலாலம்பூர் சன் பெங் தமிழ்ப் பள்ளியில் முதலாம் ஆண்டில் 12 மாணவர்கள்; பாலர் வகுப்பில் 24 மாணவர்கள்
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் வட்டாரத்தில் மிகச் சிறந்த தமிழ்ப் பள்ளிகளில் ஒன்றாக விளங்கி வரும் சன்பெங் தமிழ்ப் பள்ளியில் முதலாம் ஆண்டில் 12 மாணவர்கள் காலடி எடுத்து வைத்துள்ளனர்.
அதே சமயம் பாலர் பள்ளியில் 24 மாணவர்கள் பதிந்து கொண்டுள்ளனர் என்று பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியலெட்சுமி தேவி தெரிவித்தார்.
தற்போது சன் பெங் தமிழ்ப் பள்ளியில் பாலர் பள்ளி மாணவர்களைச் சேர்ந்து மொத்தம் 104 மாணவர்கள் பயில்கின்றனர்.
பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் அண்ட்ரூ டேவிட், டத்தோ ரஜினி இன்று பள்ளிக்கு நேரடியாக வருகை புரிந்து பாலர் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினர்.
கடந்த வாரம் முதலாம் ஆண்டு முதல் 6 ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு அவர் பள்ளி சீருடைகளை வழங்கினார்கள்.
சன் பெங் தமிழ்ப் பள்ளிக்கு பேருதவி புரியும் அண்ட்ரூ டேவிட், டத்தோ ரஜினி உட்பட அனைத்து தரப்பினருக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கியலெட்சுமி தேவி நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 2, 2024, 3:32 pm
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்: பிரதமர் நம்பிக்கை
May 2, 2024, 2:09 pm