நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாய் மொழிப் பள்ளிகளுக்கு எதிரான சர்ச்சையை நிறுத்துங்கள்: ஏரன் அகோ

கோலாலம்பூர்:

நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் இருப்பது தொடர்பான சர்ச்சையை அனைத்து தரப்பினரும்  உடனடியாக நிறுத்த வேண்டும்.

தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் ஏரன் அகோ டகாங் கூறினார்.

தாய்மொழிப் பள்ளிகளுக்கு எதிராக தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்த வண்ணமாக உள்ளது.

இந்த விவாதம் தொடர்ந்தால் பல இன,  மதம் சார்ந்த மலேசியர்களிடையே கட்டமைக்கப்பட்ட ஒற்றுமை, நல்லெண்ண உணர்வை சீர்குலைக்கும்ச்

தாய்மொழிப் பள்ளிகள் பிரிவினைக்கு இட்டுச் செல்லும் காரணி அல்ல.

உண்மையில் தாய்மொழிப் பள்ளிகள் ஒருமைப்பாட்டுக்கு முக்கிய பங்கை வகிக்கின்றன என்று அமைச்சர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset