செய்திகள் மலேசியா
விரைவுப் பேருந்து டிரெய்லரை மோதியது: ஓட்டுநர் மரணம்
அலோர் காஜா:
விரைவுப் பேருந்து டிரெய்லர் லோரியை மோடிய சம்பவத்தில் ஓட்டுநர் மரணமடைந்துடன் எழுவர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 220.4 கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
அதிகாலை 2.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பேருந்து இருக்கையில் சிக்கி கொண்டார்.
இதனால் 41 வயதான சுல்கர்னைன் ஜலில் தலை, உடலில் ஏற்பட்ட பலத்த காயத்தால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதே வேளையில் இந்த சம்பவத்தில் லோரி ஓட்டுநன் எந்தவொரு காயமும் இன்றி உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தில் 7 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
முதற்கட்ட விசாரணையில், டிரெய்லர் லோரி ஜொகூரில் இருந்து செனவாங், சிரம்பான் நகருக்கு சென்று கொண்டிருந்தது.
அதே நேரத்தில் விரைவு பேருந்து ஜொகூர் லார்கின் பேருந்து நிலையத்திலிருந்து கோலாலம்பூர் டிபிஎஸ் பேருந்து நிலையத்தை நோக்கி 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.
வலது பாதையில் சென்று கொண்டிருந்த டிரெய்லரின் பின்புறத்தில் விரைவுப் பேருந்து மோதியதில் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம்.
இதனை அலோர்காஜா போலீஸ் தலைவர் அர்ஷத் அபு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 7, 2024, 11:34 pm
நம்பிக்கையை இழந்த சீன மக்கள் அச்சத்தால் ஜசெகவுக்கு வாக்களிக்கின்றனர்: வீ கா சியோங் சாடல்
May 7, 2024, 5:58 pm
நராதிவாட்டில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 மலேசியர்கள் காயமடைந்தனர்
May 7, 2024, 5:52 pm
கோல குபு பாரு இடைத் தேர்தலின் வாக்குப் பதிவு 75 சதவீதத்தை எட்டும்: தேர்தல் ஆணையம்
May 7, 2024, 5:10 pm