நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வான் ஃபைசாலுக்கு எதிராக அன்வாரின் முன்னாள் அதிகாரி 10 மில்லியன் வழக்கு பதிவு

பெட்டாலிங் ஜெயா:

அன்வாரின் முன்னாள் அதிகாரி, ஃபர்ஹாஷ் வாஃபா சல்வாடோர், மாச்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் வான் ஃபைசாலிடமிருந்து 10 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரியுள்ளார். 

பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கு ஆதரவு தெரிவிக்க பல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஃபர்ஹாஷ் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

அன்வாரின் முன்னாள் அரசியல் செயலாளருமான அவர் வான் ஃபைசாலுக்கு எதிராக ஜனவரி 22-ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.

கூற்று அறிக்கையின்படி, கடந்த ஆண்டு நவம்பர் 14-ஆம் தேதி கோலாலம்பூரிலுள்ள நாடாளுமன்றக் கட்டடத்தில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஃபைசால் அவதூறான அறிக்கையை வெளியிட்டதாக ஃபர்ஹாஷ் குற்றம் சாட்டினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset