நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய இஸ்லாமிய வாரியத்தின் தலைவர் பதவியிலிருந்து சிலாங்கூர் சுல்தான் விலகுகிறார்

கோலாலம்பூர்:

தேசிய இஸ்லாமிய விவகாரங்களுக்கான வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷரஃபுத்தீன் இத்ரிஸ் ஷா விலகுகிறார்.

நாளை அவர் இந்த பதவியில் இருந்து விலகுகிறார்.

சிலாங்கூர் அரச அலுவலகம் ஒரு பேஸ்புக் பதிவில், 

சுல்தான் ஷரஃபுத்தீன், கடந்த 20122 மார்ச் 10 முதல் வாரியத்தை வழிநடத்தி வருகிறார்.

தற்போது அவர் மீண்டு அவ்வாரியத்திற்கு தலைமை தாங்க விரும்பவில்லை என்று கூறியது.

புதிய தலைவரை தேர்வு செய்வதை ஆட்சியாளர்கள் மன்றத்திற்கே சுல்தான் விட்டு விடுகிறார்.

2022 இன் சட்ட விதியின் படி, வாரியத்தின் தலைவர் ஆட்சியாளர்களின் மாநாட்டால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

மேலும் ஆட்சியாளர் இரண்டு வருட பதவிக் காலத்தை வகிக்கிறார். அவர்களின் பதவிக்காலம் புதுப்பிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset