நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

துணை நிறுவனங்களின் கணக்கைப் பற்றி முன்னாள் எஸ்ஆர்சி இயக்குநர்கள் கேட்டதில்லை: கெவின் சுவாம்பிள்ளை

கோலாலம்பூர்:

எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்கள், பிஎஸ்ஐ வங்கியைத் தங்கள் துணைக் கணக்கு குறித்து விசாரிக்க ஒருபோதும் அழைத்தது இல்லை.

முன்னாள் பிஎஸ்ஐ வங்கி அதிகாரி கெவின் சுவாம்பிள்ளை உயர் நீதிமன்றத்தில் இன்று  இதனை தெரிவித்தார்.

இயக்குநர்களிடம் இருந்து எந்த கேள்விகளும் இல்லாததால், கணக்கின் நிலை குறித்து அவர்கள் அறிந்திருப்பதாக நான் கருதினேன்.

கடந்த  2010 முதல் 2016 வரை வங்கியில் பணிபுரிந்த ஸ்வாம்பிள்ளை, 

இயக்குநர்கள் வங்கியைத் தொடர்பு கொள்ளாததில் ஆச்சரியமில்லை என்றார்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் வழக்கறிஞர் ஷாஃபி அப்துல்லாஹ்  எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர்,

கணக்கில் கையொப்பமிட்டவர்கள் எடுத்த நடவடிக்கைகள் அனைத்தும் பங்குதாரரிடம் தெரிவிக்க வேண்டியவர்களுக்குத் திருப்பி அனுப்பப்படும் என்று நான் கருதுகிறேன் என்றார்.

முன்னாள் இயக்குநர்கள் எப்போதாவது வங்கியில் தங்கள் கணக்கை சரிபார்த்தார்களா என்று ஷாஃபி சுவாம்பிள்ளையிடம் கேட்டிருந்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset