நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் முதலீடு செய்வதை ஆஸ்திரேலிய - ஆசியான் முதலீட்டாளர்கள் பரிசீலிக்க வேண்டும்: பிரதமர்

மெல்பர்ன்:

மலேசியாவில் முதலீடு, பொருளாதார வளர்ச்சிக்கான சாதகமான சூழலைக் கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய, ஆசியான் வர்த்தக நிறுவனங்களுக்கு மலேசியாவில் முதலீடு செய்வது குறித்து பரிசீலிக்குமாறு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.

மலேசியாவின் தற்போதைய நிலைத்தன்மை, தமது தலைமையின் கீழ் பலம் இருப்பதால்தான் மலேசியாவின் சாதகமான முதலீட்டுச் சூழல்  உள்ளது.

அரசியல் நிலைத்தன்மை, நாம் இப்போது நல்லாட்சியில் கவனம் செலுத்த முடியும்.

கொள்கைகளில்  தெளிவான திட்டமும் முன்னுரிமையும் வழங்கப்படும் என்று அவர் மெல்பர்னில் நடந்த  ஆசியான் முதலீட்டு மாநாட்டில் பிரதமர் மேற்கோள் காட்டினார்.

இலக்கவியல் மாற்றத்தை அடிப்படையாக கொண்டு பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கான நடவடிக்கைகள்   விரைவுபடுத்தப்படும்.

இது நடப்பதை உறுதி செய்ய தேவையான அனைத்தையும் செய்ய அரசு கடமைப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset