செய்திகள் மலேசியா
ஆஸ்திரேலிய நிறுவனங்களின் உயர்மட்டத் தலைவர்களுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு
மெல்பர்ன்:
ஆஸ்திரேலியாவுக்குப் பணி நிமித்தப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அந்நாட்டின் 18 முன்னணி நிறுவனங்களின் உயர் நிர்வாகத் தலைவர்களைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு இன்று மெல்பர்னில் நடைபெற்றது.
மலேசியாவில் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் தங்களின் வர்த்தகங்களையும் முதலீடுகளையும் அதிகரிப்பதற்கு ஊக்குவிக்கும் நோக்கில் இந்தச் சந்திப்பு நடத்தப்பட்டது.
முதலீட்டாளர்களின கருத்துகளைப் பெறுவதற்காக அந்த முதலீட்டாளர்களுடன் தனிப்பட்டச் சந்திப்பையும் பிரதமர் நடத்தினார்.
மருத்துவ உபகரணங்கள் மற்றும் எஃகு உள்ளிட்ட உற்பத்தித் துறை, தரவு மையம், நிதி மற்றும் வர்த்தகம் போன்ற சேவைத் துறையைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பு நிகழ்வில் பேசிய அன்வார், எப்போதும் இல்லாத அளவுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தெளிவான மற்றும் ஆகக்கரமான கொள்கைகளைத் தனது தலைமையிலான அரசாங்கம் அமல்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நடப்பு அரசாங்கம் நிலைத்தன்மையாக இருப்பதால் மலேசியாவுக்கு முதலீட்டை ஈர்ப்பதற்கான முக்கிய அம்சமாகவும் இது விளங்குகிறது.
புதிய கொள்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளதால் எப்போதும் இல்லாத அளவுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை அதிகளவில் ஈர்த்துள்ளதையும் பிரதமர் சுட்டிக் காட்டினார்.
அவர்.
கடந்தாண்டு 32,950 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடுகளை மலேசியா ஈர்த்துள்ளதாக அன்வார் கடந்த மாதம் கூறியிருந்தார்.
கடந்த 2022-ஆம் ஆண்டை விட இது 23 விழுக்காடு அதிகமானது என்பதோடு நாட்டின் வரலாற்றில் மிக உயர்வானதும் என்றார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm