செய்திகள் மலேசியா
பேராக் மாநிலத்தில் இறையில்லப் புரட்சி: நாட்டில் நெகிழி பயன்படுத்தாத முதல் மஸ்ஜித் பெங்காலான் ஹுலு பள்ளிவாசல்
ஈப்போ:
பேராக் மாநிலத்திலுள்ள பெங்காலான் உலு மஸ்ஜித் ஜமேக், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை பயன்படுத்தக் கூடாது என்று முடிவெடுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. நெகிழி டப்பாக்களில் உணவு, பானங்கள் பயன்படுத்தக் கூடாது என்பதை நடைமுறைப்படுத்திய முதல் பள்ளிவாசல் என்ற பெருமையைப் பெற்ற்றுள்ளது.
பெங்காலான் ஹுலு பள்ளிவாசல் நிர்வாக குழுவினர் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்தனர்.
பேராக் சுல்தான் அறிவுரை வழங்கியதை அடுத்து பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்களால் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
சமீபத்தில் பேராக் சுல்தான் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியை பயன்படுத்த வேண்டாம் என்றும், நெகிழி பாட்டில்கள், பேக்கேஜிங்கில் உள்ள பானங்கள், உணவுகளை மாணவர்கள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தினார்.
பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது என இந்நிகழ்வுக்கு தலைமை ஏற்ற பி.ப.சங்கத்தின் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.
இதர சுற்றுவட்டார பள்ளிவாசல் உறுப்பினர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் இந்த சிறப்பு விளக்கவுரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழியின் அபாயங்களை சுப்பாராவ் எடுத்துரைத்தார்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய சில நெகிழி பொருட்களான நெகிழிக் கரண்டிகள், நெகிழிப் பைகள், சூடான பானங்களுக்கு செலவழிக்கக்கூடிய நெகிழி மூடிகள், நெகிழி தண்ணீர் பாட்டில்கள், நெகிழி பெட்டிகள், பானங்களின் கோப்பைகள், சிகரெட் துண்டு,
உணவு உறைகள், பாட்டில் மூடிகள் ஆகிய அனைத்தும் நெகிழியால் செய்யப்படுகின்றது.
இவை அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் பொதுவான, அன்றாட பொருட்களாகும் என்றார் சுப்பாராவ்.
தூய்மையான வாழ்க்கை முறையை வழிநடத்த, நாம் வாங்கும் நெகிழி பேக்கேஜிங் பொருட்கள் குறித்து கவனம் செலுத்தி, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழி பொருட்களை வாங்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுப்பது புத்திசாலித்தனம் என்றார் அவர்.
மேலும் இவற்றால் புற்றுநோய் உண்டாகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் காட்டுகின்றன. மேற்கத்திய நாடுகள், இவற்றை விட்டொழித்துவிட்ட போதிலும் ஆசிய நாடுகள் இன்னும் நெகிழியின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கின்றன.
நெகிழியால் செய்யப்பட்ட ஷாப்பிங் பைகளை பயன்படுத்த வேண்டாம், அதற்கு பதிலாக துணி பை, மஞ்சள் பை அல்லது காகிதப் பைகளை, பொருட்களை வாங்க பயன்படுத்தலாம்.
வேலைக்கு செல்லும்போது சொந்தமாக டீ அல்லது காபி குடுவைகளை எடுத்துச்செல்லுங்கள். சில்வர் டம்லர்களை பயன்படுத்தும்படி அவர் ஆலோசனை கூறினார்.
நெகிழி தண்ணீர் பாட்டில்களை வாங்காதீர்கள.
தூய்மையான வாழ்க்கை முறையை வாழ தனிமனிதர்களாகிய நாமும் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
எதிர்வரும் நோன்பு காலத்தில் சூடான நோன்பு கஞ்சியை நெகிழிப்பைகளில் வாங்கி செல்லாமல், வீட்டில் இருந்து பாத்திரங்களை கொண்டு சென்று வாங்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:37 pm
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am