செய்திகள் மலேசியா
ரஃபிசி என்னை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை: லிம் சியான் சீ
பெட்டாலிங் ஜெயா:
பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லியின் பிரதிநிதி தம்மை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை என்று சமூக ஊடகப் பிரபலம், லிம் சியான் சீ தெரிவித்தார்.
அவர் தம்மை தொடர்புக் கொள்ள ஏன் தாமதம் என்றும் தாம் அவருடன் நேருக்கு நேர் விவாதிக்க பல விஷயங்கள் இருப்பதாகவும் லிம் சியான் சீ குறிப்பிட்டார்.
மேலும், இந்த நேரலை அமர்வு மிகவும் சுவாரஸ்யமாக இருப்பதற்கு தாம் உத்தரவாதம் அளிப்பதாகவும் அவர் கூறினார்.
பிப்ரவரி 19-ஆம் தேதி ரஃபிசி யாங் பாக்கார் மந்திரி' ஒளிபரப்பில் லிம், அம்னோ உச்சமன்ற உறுப்பினர் புவாட் சர்காஷி மற்றும் முன்னாள் அம்னோ தகவல் பிரிவு தலைவர் இஷாம் ஜலீல் ஆகியோரை ஆடியோ விருந்தினர்களாக அழைக்க விரும்புவதாகக் கூறினார்.
இந்த நேரத்தில் 1MDB யை பாதுகாத்துப் பிரச்சாரத்தை நடத்திய கதாபாத்திரத்தின் உண்மையான முகத்தை வெளிப்படுத்த விரும்புவதாகவும் ரஃபிசி கூறினார்.
இருப்பினும், அவர்களை அழைப்பதற்கு முன், பிரதமர் அன்வார் இப்ராஹிம் மற்றும் அம்னோ தலைவராக இருக்கும் துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடி ஆகியோரின் பதிலைப் பெறுவேன் என்று ரஃபிசி கூறினார்.
லிம் உடனடியாக சவாலை ஏற்றுக்கொண்டு நேருக்கு நேர் சந்திப்பு நடத்த தயார் என்றும் தெரிவித்தார்.
இரண்டு வாரங்கள் கடந்துவிட்ட போதிலும், ரஃபிசியின் பிரதிநிதி தன்னை இன்னும் தொடர்பு கொள்ளவில்லை என்று லிம் நேற்று கூறினார்.
அண்மையில் நடைபெற்ற பூமிபுத்ரா பொருளாதார காங்கிரஸில் அமைச்சர் கலந்து கொண்டதால், ரஃபிசி இந்த விவகாரத்தை நேருக்கு நேர் விவாதிக்க முடியும் என்று அவர் கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 28, 2024, 7:37 pm
தமிழும், சமயமும் நமக்கு இரண்டு கண்கள்: டத்தோஸ்ரீ சரவணன்
April 28, 2024, 7:28 pm
பேரா மாநில மஇகா மகளிர், இளைஞர் , புத்ரா, புத்ரி தேர்தல்: மூன்று தொகுதிகளில் போட்டி
April 28, 2024, 3:00 pm
கோல குபு பாருவில் பொய் பிரச்சாரங்களை இந்திய சமூகம் நம்பக் கூடாது: டத்தோ ரமணன்
April 28, 2024, 2:57 pm
டத்தோ ரமணனின் பெருநாள் திறந்த இல்ல உபசரிப்பில் 5,000 பேர் கலந்து கொண்டனர்
April 28, 2024, 2:53 pm
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை இழந்தால் மீண்டும் கிடைக்காது: சுரேந்திரன் கந்தா
April 28, 2024, 1:59 pm
முதியவரைத் தாக்கிய விவகாரம்; சமூக நல இல்லத்தின் நிர்வாகிக்கு 4,500 ரிங்கிட் அபராதம்
April 28, 2024, 12:40 pm
இந்தியாவில் கல்வி பயிலும் மலேசிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும்: தூதரக அதிகாரி சுஷ்மா
April 28, 2024, 11:34 am
ஆம்புலன்ஸ் 6 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது: இருவர் காயம்
April 28, 2024, 11:23 am