நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பள்ளி விடுமுறையால் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் தாமதம் ஏற்படலாம்

சிங்கப்பூர்:

மார்ச் பள்ளி விடுமுறையை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகளில் தாமதம் ஏற்படலாம் என முன்னுரைக்கப்பட்டுள்ளது.

வரும் வெள்ளிக்கிழமை, மார்ச் 8ஆம் தேதி முதல் அடுத்த திங்கட்கிழமை மார்ச் 18ஆம் தேதி வரை அந்த நிலை தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் சீனப்புத்தாண்டையொட்டி வந்த நீண்ட விடுமுறை காலத்திலும் இதே போன்றதொரு அறிவிப்பைக் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் வெளியிட்டிருந்தது.

பிப்ரவரி 8 முதல் 13ஆம் தேதிக்குள் சுமார் 2.3 மில்லியன் பேர் எல்லைகளைக் கடந்திருந்தனர்.

அதாவது நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 390,000 பேர்.
விளம்பரம்

சராசரி நாள்களுடன் ஒப்பிடுகையில் அது 35 விழுக்காடு அதிகம்.

கார்களுக்கான வரிசையில் கிட்டத்தட்ட 3 மணி நேரம் வரை காத்திருக்கவேண்டியிருந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset