செய்திகள் மலேசியா
வரி செலுத்தாதவர்களைத் தேடி நடவடிக்கை எடுங்கள்: பிரதமர் அன்வார்
சைபர் ஜெயா:
வரி வசூலிப்பதில் உள்நாட்டு வருமான வரி வாரியம் உறுதியாகவும் தைரியமாகவும் தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் அன்வார் தெரிவித்துள்ளார்.
ஒருவரின் செல்வாக்கு மற்றும் பதவியைப் பொருட்படுத்தாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
வரி செலுத்தாதவர்களைத் தேடுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்நாட்டு வருமான வரி வாரியம் பயப்பட வேண்டாம் என்று நிதியமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.
தங்கள் செல்வாக்கு மற்றும் பதவி காரணமாக, அவர்கள் வரி செலுத்துவதைத் தவறவிடுகிறார்கள் என்ற உணர்வு அவர்களுக்கு இருக்க வேண்டும் என்றார்.
ஒருவர் வரி செலுத்துகிறாரா இல்லையா என்பதை உறுதி செய்ய வேண்டும். அவர் வரி செலுத்த தவறியிருந்தால் அவரைத் தேடி சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
இதற்கு முன்னர் அமைச்சரவையில் பதவி வகித்த வரலாற்றையும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.
நாட்டில் எண்ணில் அடங்காதப் பெரிய நிறுவனங்கள் வரி செலுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்குவதையும் அவர் குறிப்பிட்டார்.
கடந்தாண்டு மட்டும் உள்நாட்டு வருமான வரி வாரிய 183.34 பில்லியன் வரியை வசூல் செய்துள்ளது.
இது முந்தைய ஆண்டு வசூலை விட 7.8 பில்லியன் அல்லது 4.49 விழுக்காடு அதிகமாகும்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm