நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

91-ஆவது இராணுவத் தினத்தை முன்னிட்டு மாமன்னர் வாழ்த்து 

கோலாலம்பூர்:

இன்று அனுசரிக்கப்படும் 91-ஆவது ராணுவத் தினத்தை முன்னிட்டு அனைத்து ராணுவ வீரர்களுக்கும் மான்னர் சுல்தான் இப்ராஹிம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

நாட்டின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பைப் காப்பதில்  நேரத்தையும் பொருட்படுத்தாமல் தியாகம் செய்யும் ராணுவ வீரர்களுக்கு அரச மலேசிய இராணுவப் படையின் உயர் ஆட்சியாளராக இருக்கும் மான்னர் இன்று தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். 

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கு தாம் பிராத்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அவர்களின் சேவைகளையும் தியாகங்களையும் பணத்தால் மதிப்பிட முடியாது என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார்.

நாட்டின் இறையாண்மையைக் காக்கப் போராடிய முன்னாள் இராணுவ வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்வதோடு, சமூகத்துடனான இராணூவத்தின் உறவை வலுப்படுத்தவும் ஒவ்வொரு மார்ச் 1-ஆம் தேதி ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது.

91-வது இராணுவத் தினத்துடன் இணைந்து, ஜொகூர் டத்தாரான் சிகாமாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று முதல் இன்று வரை நடத்தப்பட்டன. 

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset