செய்திகள் மலேசியா
உயர் மதிப்புள்ள சரக்கு வரி மூலம் அரசாங்கம் ஆண்டுக்கு 700 மில்லியன் ரிங்கிட்டை சம்பாதிக்கும்: பிரதமர்
கோலாலம்பூர்:
உயர் மதிப்புள்ள சரக்கு வரியின் வாயிலாக ஆண்டுதோறும் 700 மில்லியன் ரிங்கிட்டைஅரசாங்கம் வருமானம் ஈட்டவுள்ளது. பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
ஆடம்பர வரி என்று அழைக்கப்பட்ட இப் புதிய வரி தொடர்பான மசோதா, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தின் போது தாக்கல் செய்யப்படும் என்று நிதியமைச்சருமான அவர் கூறினார்.
கடந்த 2024 பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது முதலில் இந்த வரி அறிவிக்கப்பட்டது.
மக்களவையில் அங்கீகரிக்கப்பட்டால் வரும் மே 1 முதல் இது நடைமுறைக்கு வரும்
தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம்மி புவா எழுப்பிய கேள்விக்கு பிரதமர் இவ்வாறு பதில் அளித்தார்.
முன்னதாக கடந்த அக்டோபரில் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, இப் புதிய வரி 5% முதல் 10% வரை அமைக்கப்படும்.
குறிப்பிட்ட விலை வரம்பைத் தாண்டிய நகைகள், கைக்கடிகாரங்கள் போன்ற பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என்றார் பிரதமர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm