செய்திகள் மலேசியா
உலக தங்க வணிகர்கள் மாநாட்டின் வாயிலாக தங்க வணிகம் விரிவாக்கம் காண்கிறது: டத்தோ அப்துல் ரசூல்
கோலாலம்பூர்:
உலக தங்க வணிகர்கள் மாநாட்டின் வாயிலாக நாட்டின் தங்க வணிகம் மேலும் ஒருபடி மேல் சென்று விரிவாக்கம் காண்கிறது என்று மலேசிய இந்தியர் நகை வணிகர், பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் கூறினார்.
இதற்கு முன்னர் உலக தங்க வணிகர்கள் மாநாட்டை அரபு நாடுகள் மட்டுமே நடத்தி வந்துள்ளன.
இம்முறை உலக தங்க வணிகர்கள் மாநாட்டை ஏற்று நடத்தும் வாய்ப்பு மலேசியாவுக்கு கிடைத்துள்ளது.
தென்கிழக்கு ஆசியாவில் இந்த மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
கிட்டத்தட்ட 50 நாடுகளில் இருந்து பேராளர்கள் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
இம்மாநாடு மலேசியாவுக்கு மிகப் பெரிய பெருமைச் சேர்த்துள்ளது. குறிப்பாக உலக ரீதியிலான தங்க வணிகர் இங்கு ஒன்றுக் கூடி உள்ளனர்.
இந்த வணிகத்தின் அடுத்த திட்டங்கள், சவால்கள், முதலீடுகள் உட்பட பல விவகாரங்கள் குறித்து இங்கு விவாதிக்கப்படுகிறது.

இம்மாநாடு மலேசிய தங்க நகை வணிகர்களுக்கு பெரும் பயனாக அமைந்துள்ளது. குறிப்பாக மலேசிய தங்க வணிகம் இம்மாநாட்டின் வாயிலாக விரிவாக்கம் கண்டு அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது என்று டத்தோ அப்துல் ரசூல் கூறினார்.
தங்க நகை வணிகத்தின் மேம்பாட்டிற்காக நாங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் எங்களின் அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு மட்டும் இதுநாள் வரை அரசாங்கத்திடமிருந்து நிரந்தர தீர்வு காணப்படவில்லை.
ஆகவே எங்களின் பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வு காண வேண்டும் என்று டத்தோ அப்துல் ரசூல் வேண்டுகோள் விடுத்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 18, 2025, 8:44 pm
2026இல் பூமிபுத்ரா, இந்திய தொழில்முனைவோருக்கான நிதி அதிகரிக்கப்படும்: ஸ்டீவன் சிம்
December 18, 2025, 6:15 pm
மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ ரமணன்; அந்நிய தொழிலாளர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்: பிரிமாஸ் நம்பிக்கை
December 18, 2025, 6:14 pm
உணவகத் துறைக்கு புதிய நம்பிக்கையாக டத்தோஸ்ரீ ரமணன் திகழ்கிறார்: டத்தோ மோசின்
December 18, 2025, 5:02 pm
உட்லண்ட்ஸ், துவாஸ் சாவடிகளில் அதிகப் போக்குவரத்து நெரிசல்: 3 மணி நேரம் பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை
December 18, 2025, 1:53 pm
முதலாளிகளைத் தண்டிக்காதீர்கள்; பிரிவு 45 எஃப்ஐ அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சைட் ஹுசேன்
December 18, 2025, 1:48 pm
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை; உள்துறை அமைச்சுடன் இணைந்து தீர்வு காண்பேன்: டத்தோஸ்ரீ ரமணன்
December 18, 2025, 10:38 am
சித்தியவான் மகா கணேசா வித்தியாசாலை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனை: 15 பிரிவுகளில் சிறந்த மாணவர்கள் கௌரவிப்பு
December 18, 2025, 10:21 am
வள்ளுவர் மறை வைரமுத்து உரை எனும் நூல் திருக்குறளுக்கு புதிய புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
December 18, 2025, 10:03 am
