செய்திகள் மலேசியா
ஜோகூர் குடிவரவு துறையின் வலையில் சிக்கிய 41 வெளிநாட்டவர்கள் கைது
ஜோகூர் பாரு:
ஜோகூர் குடிவரவு துறை மேற்கொண்ட நள்ளிரவு சோதனையில், ஸ்குடாய் பகுதியில் 41 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தொடர்ச்சியான கண்காணிப்பின் அடிப்படையில் இரவு 11 மணியளவில் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையில், இரண்டு மாடி வணிக வளாகத்தின் மேற்பகுதியில் தங்கியிருந்த இவர்கள் தப்பிச் செல்ல முயன்ற நிலையில் பிடிபட்டனர்.
ஜோகூர் குடிவரவு துறை இயக்குநர் டத்தோ முஹம்மத் ருஸ்டி முஹம்மத் தரஸ் தெரிவிக்கையில், 16 முதல் 49 வயதுக்குட்பட்ட 7 இந்தோனேசிய ஆண்கள், 4 பெண்கள், 19 மியான்மர் ஆண்கள், 11 பெண்கள் என மொத்தம் 41 பேர் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கூறினார்.
சோதனையில் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாமலும், அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவைத் தாண்டியும் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது.
கைது செய்யப்பட்ட அனைவரும் குடிவரவு சட்டம் 1959/63-இன் கீழ் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக வெளிநாட்டவர்களை வேலைக்கு அமர்த்துவோர் மீது கடும் நடவடிக்கை தொடரும் என குடிவரவு துறை எச்சரித்துள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 10:36 pm
மலேசியாவில் பிப்ரவரி 18 இரவு தராவீஹ் தொழுகை; 19 வியாழன் அன்று நோன்பு நோற்கப்படும்: அரச முத்திரைக் காப்பாளர்
February 17, 2026, 5:32 pm
பண்டிகை விடுமுறை முடிவு: தலைநகரை நோக்கி வாகன நெரிசல் அதிகரிப்பு
February 17, 2026, 5:30 pm
சுங்கைப் பூலோ பாலம் அருகே திடீர் முதலை தாக்குதலில் 30 வயது ஆடவர் மாயமானார்
February 17, 2026, 5:25 pm
25 ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட குளம்: சிரம்பான் நகர மேம்பாட்டு திட்டம் உயிர் பெறுகிறது
February 17, 2026, 12:41 pm
“இன்று ஒற்றுமைக்கான நாள்”: சீனப் புத்தாண்டில் பிரதமர் அன்வார்
February 17, 2026, 12:37 pm
உள்ளூர் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்திய வெளிநாட்டவர்களை போக்குவரத்து துறை கைது செய்தனர்
February 17, 2026, 12:34 pm
சுங்கை புவாயா, ரவாங் விரைவுச்சாலையில் கொடூர விபத்து: பெண் ஒருவர் பலி
February 17, 2026, 12:32 pm
குவாந்தானில் அதிர்ச்சி சம்பவம்: ஒரே வீட்டில் ஐவர் படுகொலை
February 17, 2026, 2:13 am
