நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

“இன்று ஒற்றுமைக்கான நாள்”: சீனப் புத்தாண்டில் பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:

இன்றைய நாளை வேறு விவகாரங்களில் செலவிடாமல், மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்கும் நாளாகக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.

மலேசிய சீன சங்கம் நடத்திய சீனப் புத்தாண்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்று ஒற்றுமையின் முக்கியத்துவத்தை முன்னிறுத்த வேண்டிய நாள்; மற்ற விஷயங்கள் பின்னர் பார்க்கலாம்,” என தெரிவித்தார்.

இதற்கு முன் தனது உரையில், ‘குதிரை ஆண்டு’ நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வேகத்தையும், புதிய முன்னேற்றத்தை தரும் அடையாளமாக இருக்கும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த விழாவில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, ஒற்றுமையின் அடையாளமாக ஒன்றிணைந்து கொண்டாடினர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset