நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுங்கை புவாயா, ரவாங் விரைவுச்சாலையில் கொடூர விபத்து: பெண் ஒருவர் பலி

கோலாலம்பூர்:

சுங்கை புவாயா–ரவாங் இடையிலான வடக்கு, தெற்கு விரைவுச்சாலையில், ஒரு லாரியும் இரண்டு கார்களும் மோதிய விபத்தில், 50 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

சிலாங்கூர் தீயணைப்பு, மீட்பு துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், காலை 7.33 மணிக்கு தகவல் கிடைத்ததையடுத்து ரவாங் நிலையத்திலிருந்து 14 வீரர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.

சுண்ணாம்பு ஏற்றிய லாரி, ஹோண்டா சிட்டி, பிஎம்டபிள்யூ கார்  இந்த விபத்தில் சிக்கின.

ஹோண்டா சிட்டி காரில் பயணித்த 50 வயது பெண் உயிரிழந்ததாக மலேசிய சுகாதார அமைச்சகம் மூலம் உறுதி செய்யப்பட்டது. 

ப்ளஸ் மலேசியா தகவலின்படி, தெற்குநோக்கி அனைத்து வழித்தடங்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.

இதனிடையே காலை 8.40 மணியளவு முதல் அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset