செய்திகள் மலேசியா
சுங்கை புவாயா, ரவாங் விரைவுச்சாலையில் கொடூர விபத்து: பெண் ஒருவர் பலி
கோலாலம்பூர்:
சுங்கை புவாயா–ரவாங் இடையிலான வடக்கு, தெற்கு விரைவுச்சாலையில், ஒரு லாரியும் இரண்டு கார்களும் மோதிய விபத்தில், 50 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
சிலாங்கூர் தீயணைப்பு, மீட்பு துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், காலை 7.33 மணிக்கு தகவல் கிடைத்ததையடுத்து ரவாங் நிலையத்திலிருந்து 14 வீரர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.
சுண்ணாம்பு ஏற்றிய லாரி, ஹோண்டா சிட்டி, பிஎம்டபிள்யூ கார் இந்த விபத்தில் சிக்கின.
ஹோண்டா சிட்டி காரில் பயணித்த 50 வயது பெண் உயிரிழந்ததாக மலேசிய சுகாதார அமைச்சகம் மூலம் உறுதி செய்யப்பட்டது.
ப்ளஸ் மலேசியா தகவலின்படி, தெற்குநோக்கி அனைத்து வழித்தடங்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
இதனிடையே காலை 8.40 மணியளவு முதல் அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 10:36 pm
மலேசியாவில் பிப்ரவரி 18 இரவு தராவீஹ் தொழுகை; 19 வியாழன் அன்று நோன்பு நோற்கப்படும்: அரச முத்திரைக் காப்பாளர்
February 17, 2026, 5:32 pm
பண்டிகை விடுமுறை முடிவு: தலைநகரை நோக்கி வாகன நெரிசல் அதிகரிப்பு
February 17, 2026, 5:30 pm
சுங்கைப் பூலோ பாலம் அருகே திடீர் முதலை தாக்குதலில் 30 வயது ஆடவர் மாயமானார்
February 17, 2026, 5:28 pm
ஜோகூர் குடிவரவு துறையின் வலையில் சிக்கிய 41 வெளிநாட்டவர்கள் கைது
February 17, 2026, 5:25 pm
25 ஆண்டுகள் புறக்கணிக்கப்பட்ட குளம்: சிரம்பான் நகர மேம்பாட்டு திட்டம் உயிர் பெறுகிறது
February 17, 2026, 12:41 pm
“இன்று ஒற்றுமைக்கான நாள்”: சீனப் புத்தாண்டில் பிரதமர் அன்வார்
February 17, 2026, 12:37 pm
உள்ளூர் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்திய வெளிநாட்டவர்களை போக்குவரத்து துறை கைது செய்தனர்
February 17, 2026, 12:32 pm
குவாந்தானில் அதிர்ச்சி சம்பவம்: ஒரே வீட்டில் ஐவர் படுகொலை
February 17, 2026, 2:13 am
