செய்திகள் மலேசியா
சுங்கை புவாயா, ரவாங் விரைவுச்சாலையில் கொடூர விபத்து: பெண் ஒருவர் பலி
கோலாலம்பூர்:
சுங்கை புவாயா–ரவாங் இடையிலான வடக்கு, தெற்கு விரைவுச்சாலையில், ஒரு லாரியும் இரண்டு கார்களும் மோதிய விபத்தில், 50 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
சிலாங்கூர் தீயணைப்பு, மீட்பு துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், காலை 7.33 மணிக்கு தகவல் கிடைத்ததையடுத்து ரவாங் நிலையத்திலிருந்து 14 வீரர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.
சுண்ணாம்பு ஏற்றிய லாரி, ஹோண்டா சிட்டி, பிஎம்டபிள்யூ கார் இந்த விபத்தில் சிக்கின.
ஹோண்டா சிட்டி காரில் பயணித்த 50 வயது பெண் உயிரிழந்ததாக மலேசிய சுகாதார அமைச்சகம் மூலம் உறுதி செய்யப்பட்டது.
ப்ளஸ் மலேசியா தகவலின்படி, தெற்குநோக்கி அனைத்து வழித்தடங்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
இதனிடையே காலை 8.40 மணியளவு முதல் அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 2:36 pm
தக்கியூடின் புதிய செயலாளர்; சனுசி பொருளாளர்: தேசியக் கூட்டணி அறிவிப்பு
March 14, 2026, 2:35 pm
பாஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுவார்: அஹ்மத் சம்சுரி
March 14, 2026, 2:34 pm
ஆலய நிலப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்: பிரதமருக்கு குணராஜ் நன்றி
March 14, 2026, 2:33 pm
ஹிஷாமுடினின் நீக்கத்தை ரத்து செய்ய அம்னோ தயாராக உள்ளது; ஆனால் அவர் கடிதம் அனுப்ப வேண்டும்
March 14, 2026, 1:28 pm
பஹாங்கில் நோன்புப் பெருநாள் தொடர்பாக வைரலான போலி ஆவணம்
March 14, 2026, 12:32 pm
அதிக உற்பத்தித் திறன், கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியா விளக்கம் அளிக்கும்
March 14, 2026, 12:30 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை
March 14, 2026, 12:26 pm
லெபனானில் மலேசிய படைத்தளம் அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
