நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உள்ளூர் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்திய வெளிநாட்டவர்களை போக்குவரத்து துறை கைது செய்தனர்

கோத்தா பாரு:

மலேசிய சாலை போக்குவரத்து துறை நாடு முழுவதும் நடத்திய அமலாக்க நடவடிக்கைகளில், சில வெளிநாட்டவர்கள் உள்ளூர் குடிமக்களின் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்தி வாகனங்களை இயக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மலேசிய சாலை போக்குவரத்து துறையின் நிர்வாகம், செயல்பாட்டு பிரிவின் துணை தலைமை இயக்குநர் டத்தோ ஜஸ்மானி ஷஃபாவி தெரிவிக்கையில், கிளாந்தான், திரெங்கானு உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற பல வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறினார். சந்தேக நபர்களை கண்டறிய தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் விளக்கினார்.

இந்த சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த குடியேற்றத் துறையுடன், போக்குவரத்து துறையும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இந்த தகவல், லெம்பா சிரே பேருந்து நிலையத்தில் சீன புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset