நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாபு திராவம் கலந்த பாலை குடித்த குழந்தை குணமடைந்தது: போலீஸ்

பெட்டாலிங்ஜெயா:

ஷாபு திராவம் கலந்த பாலை குடித்த 16 மாதக் குழந்தை குணமடைந்து வீடு திரும்பியது.

இதனை பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருல்நிசாம் ஜாபர் கூறினார்.

சம்பந்தப்பட்ட ஆண் குழந்தைக்கு ஷாபு திராவம் கலந்த பாலை அவரின் தாயார் வழங்கியுள்ளார்.

இந்த சம்பவம் இங்குள்ள தாமான் மேடானில் நடந்தது.

34 வயதான தாய், தனது 40 வயது கணவருக்கு சொந்தமான ஷாபு திராவ தண்ணீரைப் பயன்படுத்தி தவறுதலாக குழந்தையின் பாலில் கலந்ததாக ஒப்புக்கொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் கணவன், மனைவியை  போலிசார் கைது செய்தனர்.

இருவரிடமும் நடத்தப்பட்ட ஆரம்ப சிறுநீர் பரிசோதனையின் முடிவுகள் அவர்கள் போதைப்பொருளுக்கு சாதகமாக இருப்பதைக் கண்டறிந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அக்குழந்தை காஜாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது.

தற்போது அக்குழந்தை குணமடைந்துள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset