நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களவை கூட்டத் தொடரில் முழுமையாக பங்கேற்க அரசாங்க எம்பிகள் உறுதி: ஜாஹித்

கோலாலம்பூர்:

மக்களவை அமர்வில் அனைத்து அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் உயர் அர்ப்பணிப்பை வழங்குவார்கள்.

இதனை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹித் ஹமிடி உறுதியளித்தார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அரசாங்கத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் நாளை தொடங்கவுள்ள அரச ஆணை விவாத அமர்வின் முழுமையாக பங்கேற்கவுள்ளனர்.

இன்று காலை நான் மக்களவையில் கலந்து கொண்டேன்.

இன்று தொடங்கிய 15ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது தவணையின் முதல் கூட்டத்தின் தொடக்க விழாவுடன் இணைந்து மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் உரையை கேட்டேன்.

கடவுள் சித்தமானதால் நான் அன்வாருடன் இருக்கிறேன்.

இதே போன்று நாளை தொடங்கும் அரச ஆணை விவாத அமர்வுக்கு முழு அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழுமையாக தயாராக உள்ளனர்.

நாங்கள் இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஒரு உயர் அர்ப்பணிப்பை வழங்குவோம், என்று அவர்  கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset