நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசியலில் விளையாட விரும்பினால் 16ஆவது பொதுத் தேர்தலுக்கு காத்திருங்கள்: மாமன்னர் எச்சரிக்கை 

கோலாலம்பூர்:

அரசியலில் விளையாடவிரும்பினால், அடுத்த தேர்தலுக்கு  நாடாளுமன்ற உறுப்பினர்கள் காத்திருக்க வேண்டும் என்று 15ஆவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது தவணையின் முதல் கூட்டத்தின் தொடக்க விழாவில் பேசிய மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இதனை தெரிவித்தார்.

நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கும் எந்தவொரு கட்சியினரின் கோரிக்கையையும் தாம் ஏற்கப் போவது இல்லை என்று அவர் அழுத்தம் திருத்தமாக கூறினார்.

கடந்த பொதுத் தேர்தலுக்கு பின் அமைக்கப்பட்ட ஒற்றுமை அரசாங்கத்தை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும்.

அனைத்து கட்சிகளும் அறிக்கையை ஏற்று உருவாக்கப்பட்ட ஒற்றுமை அரசாங்கத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.

நீங்கள் அரசியலில் விளையாட விரும்பினால் அடுத்த தேர்தலுக்கு காத்திருங்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாமன்னர் நினைவுறுத்தினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset