
செய்திகள் இந்தியா
புலனாய்வு அமைப்புகளை வைத்து மிரட்டி பாஜக தேர்தல் நன்கொடை: காங்கிரஸ் குற்றச்சாட்டு
புது டெல்லி:
தனியார் நிறுவனங்களை சிபிஐ, அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய அமைப்புகளை வைத்து மிரட்டி பாஜக தேர்தல் நன்கொடைகளைப் பெறுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 2018-19 முதல் 2022-23 வரையில் 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு ரூ. 335 கோடி தேர்தல் நன்கொடை அளித்துள்ளன. அந்த காலகட்டத்தில், அதே நிறுவனங்கள் அனைத்தும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையை எதிர்கொண்டுள்ளன.
இது தொடர்பாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் எழுதியுள்ள கடிதத்தில், இந்த 30 நிறுவனங்களில் 23 நிறுவனங்கள் 2018 முதல் 23 வரையில் பாஜகவுக்கு ரூ.187.58 கோடி நன்கொடை அளித்துள்ளன.
ஆனால், 2014 முதல் மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனை நடைபெற்ற ஆண்டுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், இந்த நிறுவனங்கள் பாஜகவுக்கு எந்தவித நன்கொடையும் அளிக்கவில்லை. இந்தச் சோதனைகளுக்கு பிறகே, அவை நன்கொடை கொடுக்கத் தொடங்கியுள்ளன.
சோதனை நடைபெற்ற 4 மாதங்களில் அவற்றில் 4 நிறுவனங்கள் மொத்தம் ரூ. 9.05 கோடி வரை பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளன. அதுபோல, பாஜகவுக்கு ஏற்கெனவே நன்கொடை அளித்துவந்த நிறுவனங்கள், மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனைக்குப் பிறகு நன்கொடையை பன்மடங்காக உயர்த்தி அளித்திருப்பதும் ஊடகச் செய்தி மூலம் தெரியவந்துள்ளது.
இது மிரட்டி பணம் பறித்த முறைகேடு வழக்கு என்பது தெளிவாகிறது என்று கடிதத்தில் வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார் என்றார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ அமைப்புகளைத் தவறாக பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். மத்திய பிரதேசத்தில் உள்ள ஒருர் மதுபான நிறுவனம் பாஜகவுக்கு நன்கொடை கொடுத்தவுடன் வழக்கிலிருந்து ஜாமீன் கிடைத்திருக்கிறது என்று விமர்சித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 10:35 pm