செய்திகள் இந்தியா
ஹரியாணாவில் அடுத்தடுத்து சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் காவல் அதிகாரிகள்
புது டெல்லி:
ஹரியாணாவில் கடந்த ஒரு வாரத்தில் இரு காவல் துறை அதிகாரிகள் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ரோத்தக் மாவட்டத்தில் காவல் பணியாளர் பயிற்சி மையத்தில் பணியாற்றிய ஐஜி புரண் குமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.
உயர் அதிகாரிகளின் ஜாதிய பாகுபாடால்தான் தற்கொலை செய்து கொண்டதாக கடிதம் எழுதி வைத்திருந்தார். புரண் குமாரின் மனைவி அதே மாநிலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
புரண் குமாருக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வந்தநிலையில், சந்தீப் குமார் என்ற காவல் உதவி துணை ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலைக்கு முன்பாக சந்தீப் குமார் வெளியிட்ட 6 நிமிஷ விடியோவில் உயிரிழந்த புரண் குமார் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
புரண் குமாரின் பெயரைப் பயன்படுத்தி அவரிடம் உதவியாளராக இருந்த தலைமைக் காவலர் சுஷீல்குமார் ரூ.2.5 லட்சம் லஞ்சம் பெற்றதாக மதுபான ஒப்பந்ததாரர் ஒருவர் புகார் அளித்தார். இந்த வழக்கில் சுஷீல் குமாரை கைது செய்ததில் சந்தீப் குமார் முக்கியப் பங்காற்றினார் என்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 6, 2026, 1:07 pm
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்க வெடிவிபத்து 18 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்
February 1, 2026, 3:30 pm
பட்ஜெட் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளில் கடும் சரிவு
January 31, 2026, 11:50 pm
அஜித் பவாரின் மனைவி மகாராஷ்டிராவின் முதல் பெண் துணை முதலமைச்சராக பதவியேற்றார்
January 30, 2026, 4:18 pm
நான்கு மாத கர்ப்பிணியான பெண் கொமாண்டர் கொலை: கணவர் கைது
January 30, 2026, 11:29 am
அஜித் பவார் உயிரிழந்த விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிப்பு
January 29, 2026, 1:35 pm
சாண்ட்விச் தகராறில் போலீஸ் அதிகாரி கொலை: பஞ்சாபில் பரபரப்பு
January 29, 2026, 1:09 pm
இந்தியாவில் இனி ஏடிஎம்களில் ரூ. 10, 20, 50 நோட்டுகள்
January 28, 2026, 1:02 pm
