
செய்திகள் இந்தியா
பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புது டெல்லி:
பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பிகாரில் தொடங்கப்பட்ட வாக்காளர்பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள பிகாரில் 7.42 கோடி பேர் உள்ளதாக இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது.
முதலில் 65 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 21.53 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டனர்; வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 3.66 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும், குழப்பத்தைத் தவிர்க்கவும் சேர்க்கப்பட்டவர்கள், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 4:18 pm
பிஹார் சட்டப்பேரவைத்த தேர்தல்: தேஜஸ்வியை முன்னிறுத்தி மெகா கூட்டணியின் திட்டம்
October 8, 2025, 10:15 pm
அணை திறப்பின் நீரில் அடித்து செல்லப்பட்ட 7 பேர்
October 8, 2025, 4:39 pm
வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற பாஜக எம்பிக்கு வாள் வெட்டு
October 6, 2025, 9:11 pm