செய்திகள் இந்தியா
பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புது டெல்லி:
பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பிகாரில் தொடங்கப்பட்ட வாக்காளர்பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள பிகாரில் 7.42 கோடி பேர் உள்ளதாக இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது.
முதலில் 65 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 21.53 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டனர்; வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 3.66 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும், குழப்பத்தைத் தவிர்க்கவும் சேர்க்கப்பட்டவர்கள், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
