செய்திகள் இந்தியா
பிகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புது டெல்லி:
பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 3.66 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை நீதிமன்றத்தில் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பிகாரில் தொடங்கப்பட்ட வாக்காளர்பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நவம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள பிகாரில் 7.42 கோடி பேர் உள்ளதாக இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டது.
முதலில் 65 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். பின்னர் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 21.53 லட்சம் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டனர்; வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 3.66 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.
இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும், குழப்பத்தைத் தவிர்க்கவும் சேர்க்கப்பட்டவர்கள், நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 9, 2026, 6:01 pm
1.5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட பிஞ்சு உயிர்; ராஜ்கோட்டில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு
April 9, 2026, 6:00 pm
ஆக்ராவில் சோகம்: காணாமல் போன 3 வயது சிறுமி சாக்கடையில் சடலமாக மீட்பு
April 9, 2026, 5:59 pm
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 71 வயது முதியவர் கைது
April 9, 2026, 5:30 pm
கர்நாடகாவில் மற்றுமொரு சோகம்: சந்திரத்ரோணா மலைப்பகுதியில் கேரள மாணவி மாயம்
April 8, 2026, 5:59 pm
ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவன் கொலை
April 8, 2026, 5:44 pm
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்: மிசோரம் சென்ற வங்காள இளைஞர்கள் சடலமாக மீட்பு
April 8, 2026, 12:06 pm
