
செய்திகள் இந்தியா
டெல்லியில் அரசு சார்பில் வாடகை கார் சேவை
புதுடெல்லி:
ஓலா, உபேர் போல செயலி அடிப்படையிலான வாடகை கார் சேவையை மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் அறிவித்தது.
இந்த திட்டத்தை செயல்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து முதல் மாநிலமாக மகாராஷ்டிராவில் விரைவில் இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இதே திட்டத்தை டெல்லி அரசும் அமல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பாக டெல்லி கூட்டுறவுத் துறை அமைச்சர் ரவீந்தர் இந்த்ராஜ், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஓலா, உபேர் போல செயலி அடிப்படையிலான கூட்டுறவு டாக்ஸி சேவைக்கான திட்டத்தை தயாரிக்க அவர் உத்தரவிட்டார்.
இந்தத் திட்டத்தில் டாக்ஸி ஓட்டுநர்கள் யாருக்கும் கமிஷன் கொடுக்க தேவையில்லை. இதனால் பயணக் கட்டணமும் குறையும் என்பதால் ஓலா, உபேர் நிறுவனங்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த சேவைக்காக டாக்ஸி ஓட்டுநர்களை கொண்ட கூட்டுறவு சங்கம் உருவாக்கப்பட உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 16, 2025, 11:44 am
அயோத்தியில் ரூ 200 கோடி ஊழல்
October 16, 2025, 7:37 am
டெல்லியில் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
October 15, 2025, 10:17 pm
ஹரியாணாவில் அடுத்தடுத்து சுட்டு தற்கொலை செய்து கொள்ளும் காவல் அதிகாரிகள்
October 15, 2025, 9:33 pm
ராஜஸ்தானில் பேருந்து எரிந்து 20 பேர் உயிரிழப்பு
October 12, 2025, 8:11 pm
பிகாரில் 100 இடங்களில் மஜ்லீஸ் கட்சி போட்டி
October 12, 2025, 6:48 pm
இந்தியா வந்துள்ள ஆப்கன் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் பெண்கள் அனுமதிக்கப்படாதது சர்ச்சை
October 11, 2025, 11:44 am
அமித் ஷாவிடம் ஜாக்கிரதையாக இருங்கள்: மோடிக்கு மம்தா அறிவுரை
October 9, 2025, 10:10 pm