செய்திகள் இந்தியா
டெல்லியில் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
புதுடெல்லி:
டெல்லியில் தீபாவளிக்கு பசுமைப் பட்டாசுகளை விற்க, வெடிக்க நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் அடங்கிய அமர்வு, “தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 18 முதல் 21 வரை டெல்லியில் பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
நியமிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆன்லைன் தளங்கள் மூலம் பட்டாசுகளை விற்கக் கூடாது” என தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த அனுமதிக்கான காரணம் குறித்து விளக்கிய நீதிபதிகள், “ஏற்கெனவே அமலில் இருந்த முழுமையான தடை என்பது எதிர்மறை விளைவைக் கொண்டிருந்தது. காற்றின் தரத்தில் அதிக சேதத்தை ஏற்படுத்தும் வழக்கமான பட்டாசுகளை கடத்த வழி வகுத்தது. எனவே, நாங்கள் ஒரு சமநிலையான அணுகுமுறையை எடுக்க வேண்டிய தேவை இருந்தது.” என தெரிவித்துள்ளனர்.
முந்தைய விசாரணையின்போது, டெல்லியில் பட்டாசுகளை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் ஒரு வருட காலத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை மறுபரிசீலனை செய்யப்போவதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 9, 2026, 6:01 pm
1.5 லட்சத்திற்கு விலை பேசப்பட்ட பிஞ்சு உயிர்; ராஜ்கோட்டில் கடத்தப்பட்ட 4 வயது சிறுமி மீட்பு
April 9, 2026, 6:00 pm
ஆக்ராவில் சோகம்: காணாமல் போன 3 வயது சிறுமி சாக்கடையில் சடலமாக மீட்பு
April 9, 2026, 5:59 pm
7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 71 வயது முதியவர் கைது
April 9, 2026, 5:30 pm
கர்நாடகாவில் மற்றுமொரு சோகம்: சந்திரத்ரோணா மலைப்பகுதியில் கேரள மாணவி மாயம்
April 8, 2026, 5:59 pm
ஆந்திராவில் கொடூரம்: கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவன் கொலை
April 8, 2026, 5:44 pm
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நேர்ந்த சோகம்: மிசோரம் சென்ற வங்காள இளைஞர்கள் சடலமாக மீட்பு
April 8, 2026, 12:06 pm
