நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மார்ச் 1 முதல் சுங்கை பூலோவில் தெக்குன் மடானி கண்காட்சி!

சுங்கை பூலோ:

வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை சுங்கை பூலோ Stand Mall  kota Damansara பேராங்காடியில் தெக்குன் மடானி கண்காட்சி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி சேவை மையத்தின் ஆதரவோடு நடைபெறும் இந்தக் கண்காட்சியை தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு கழகத்தின் துணை அமைச்சர் டத்தோ ஆர். ரமணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.

தனது அமைச்சின் கீழ் இயங்கும் தெங்குன் உதவிகளை எளிதில் எவ்வாறு பெற்றுக் கொள்வது தொடர்பில் போதுமான தகவல்களை இங்கு பெற்றுக் கொள்ளலாம் என்று டத்தோ ரமணன் தெரிவித்தார்.

வணிகர்களுக்கும் அமைச்சுக்கும் இடையே நல்லுறவை வலுப்படுத்திக் கொள்ளும் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset