நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுரங்கத்தில் பெண்ணின் உடல் மீட்பு; பேராக்கில் சம்பவம்

ஈப்போ: 

லாகாட் மைன்ஸ், லொம்போன்ஹ் பண்டார் பகுதியில் உள்ள சுரங்கத்தின் விலிம்பின் மேற்பரப்பில் மிதந்த நிலையில் பெண்ணில் உடல் மீட்கப்பட்டுள்ளது. அவர் இறந்து சில மணிநேரம் மட்டுமே ஆகியிருக்கக்கூடுமென நம்பப்படுகின்றது.

இதனிடையே இன்று சனிக்கிழமை காலை மணி 10.20 மணியளவில் அந்தப் பெண்ணின் உடலை மீட்க காவல்துறைக்கு உதவுமாறு தமது தரப்புக்கு அழைப்பு வந்ததாகப் பேரா தீயணைப்பு, மீட்பு துறை (JBPM) செயல் பிரிவு உதவி இயக்குநர் சபரொட்ஸி நோர் அஹ்மத் தெரிவித்தார்.

"நாங்கள் உடனடியாக ஈப்போ பாசீர் புத்தே தீயணைப்பு, மீட்பு நிலையத்தை அணுகினோம். அங்கிருந்து ஒரு குழு சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்தது. அந்தப் பெண்ணின் உடல் முழு ஆடையுடன் மீட்கப்பட்டது. அடையாள அட்டையும் கண்டுபிடிக்கப்பட்டது." என அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு காலை 11.24க்கு அனைத்து நடவடிக்கைகளும் முடிவடைந்த பிறகு மீட்கப்பட்ட பெண்ணின் உடல், ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

-தயாளன் சண்முகம் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset