நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு மருத்துவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 80 ரிங்கிட் அலவன்ஸ் வழங்கப்படும்: சுகாதார அமைச்சர்

புத்ராஜெயா:

கிளினிக்குகளில் பணி நேரத்திற்குப் பிறகு வேலை செய்யச் சொல்லப்பட்ட அரசு மருத்துவர்கள் இப்போது ஒரு மணி நேரத்திற்கு 80 ரிங்கிட் அலவன்ஸை உடனடியாகப் பெறலாம்.

இதனை சுகாதார அமைச்சர் சூல்கிப்ளி அஹ்மத் கூறினார்.

அரசு மருத்துவர்கள்  மத்தியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை நிவர்த்தி செய்யும் நோக்கில் இந்த முடிவு அண்மையில் எடுக்கப்பட்டது.

இதன் வாயிலாக லோக்கம் வேலை செய்யும் மருத்துவர்களுக்கான கட்டணச் சிக்கல்களைத் தீர்த்துள்ளோம்.

ஒவ்வொரு மருத்துவருக்கும் அவர்கள் வேலை செய்யும் ஒவ்வொரு மணி நேரத்திற்கு இப்போது ஊதியம் வழங்கப்படும், என்று அவர் கூறினார்.

கடந்த ஆண்டு மருத்துவமனைகளுக்கு அருகில் கிளினிக் செயல்படும் நேரத்தை நீட்டிக்கும் முன்னோடித் திட்டம் பரிசீலனை செய்யப்பட்டு, லோக்கம் அலவன்ஸ்களை தொடர்ந்து செலுத்துவதற்கான கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சகம் முன்பு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset