நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஸ்பான்கோ முறைகேட்டில் தொடர்பா?: மொஹைதின் யாசின் மறுப்பு

கோலாலம்பூர்:

ஸ்பான்கோவுக்கு அரசு கார் ஒப்பந்த முறைகேட்டில் தொடர்புள்ளதாக சமூக ஊடகங்களில் எழுந்த குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் மறுத்துள்ளார்.

மேலும் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் 2020 இல் வேறு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்தது என்பதை தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

ஸ்பான்கோ நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதற்கான சரியான தேதியையும் அரசு வெளியிட வேண்டும்.

ஸ்பான்கோ விவகாரம் மலேசிய ஊழல் ஆணையத்தின் விசாரணைக்கு உட்பட்டது.

என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அபாண்டமாகக் கூறாதீர்கள். 

மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை பிரதமராக இருந்த நான், நிதி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் எந்த ஒப்பந்தத்தையும் வழங்குவதில் ஈடுபடவில்லை.

எனது நற்பெயரை கெடுக்கும் நோக்கில் எனது அரசியல் எதிரிகளால் நடத்தப்படும் தாக்குதல் இது என்றார் அவர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset