செய்திகள் மலேசியா
ஸ்பான்கோ முறைகேட்டில் தொடர்பா?: மொஹைதின் யாசின் மறுப்பு
கோலாலம்பூர்:
ஸ்பான்கோவுக்கு அரசு கார் ஒப்பந்த முறைகேட்டில் தொடர்புள்ளதாக சமூக ஊடகங்களில் எழுந்த குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் மறுத்துள்ளார்.
மேலும் நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் 2020 இல் வேறு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ஏன் ரத்து செய்தது என்பதை தற்போதைய அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
ஸ்பான்கோ நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதற்கான சரியான தேதியையும் அரசு வெளியிட வேண்டும்.
ஸ்பான்கோ விவகாரம் மலேசிய ஊழல் ஆணையத்தின் விசாரணைக்கு உட்பட்டது.
என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அபாண்டமாகக் கூறாதீர்கள்.
மார்ச் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை பிரதமராக இருந்த நான், நிதி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் எந்த ஒப்பந்தத்தையும் வழங்குவதில் ஈடுபடவில்லை.
எனது நற்பெயரை கெடுக்கும் நோக்கில் எனது அரசியல் எதிரிகளால் நடத்தப்படும் தாக்குதல் இது என்றார் அவர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 4, 2024, 6:19 pm
நாட்டில் அனைத்து சமூகத்தினரின் உரிமைகளும் காக்கப்படும்: பிரதமர் அன்வார்
May 4, 2024, 3:45 pm
நஜீப் விவகாரத்தில் அம்னோ, தேமு ஊமையாக இருக்கக் கூடாது: டத்தோஶ்ரீ தனேந்திரன்
May 4, 2024, 3:43 pm
கோல குபு பாருவில் பிரதமரை விமர்சித்ததாக கூறப்படும் தகவலை டத்தோஶ்ரீ சரவணன் மறுத்தார்
May 4, 2024, 3:41 pm
மலேசியாவில் தமிழர்களின் வரலாறு பாதுக்காக்கப்பட வேண்டும்: சென்னை நீதிபதி கிருஷ்ணன்
May 4, 2024, 3:39 pm
வீட்டின் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல்: பாசிர் மாஸில் பரபரப்பு
May 4, 2024, 3:02 pm
வாக்கு செலுத்த வேண்டாம் என்பதை வலியுறுத்துவர்கள் சுயநலவாதிகள்: ஓம்ஸ் பா.தியாகராஜன்
May 4, 2024, 1:56 pm