நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சென்ற அமைச்சரின் கார் கூடுதல் தகவல்களை டிபிபி கோரியுள்ளது: பேராக் காவல்துறை தலைவர்

கோலாலம்பூர்:

ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து சென்ற அமைச்சரின் கார் குறித்த விசாரணைகள் முடிந்தது.

விசாரணை அறிக்கை கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி துணை அரசு வழக்கறிஞர் (டிபிபி) அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான கூடுதல் தகவல்களை சேகரிக்குமாறு காவல்துறைக்கு டிபிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

பேரா மாநில போலீஸ் தலைவர் முஹம்மத் யூஸ்ரி ஹசன் பஸ்ரி இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் விசாரணை அதிகாரிக்கு பல அறிவுரைகள் வழங்கப்பட்டன. 

விசாரணை ஆவணங்கள் விரைவில் (டிபிபிக்கு) மீண்டும் சமர்ப்பிக்கப்படும் என்று அவர் மேற்கோள் காட்டினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset