நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாத்தாம் கோ-கார்ட் விபத்தில் மாண்ட சிங்கப்பூர் பெண்

பாத்தாம்:

இந்தோனேசியாவின் பாத்தாம் தீவில்  நிகழ்ந்த கோ-கார்ட் விபத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் மாண்டதாக இந்தோனேசிய ஊடகம் தெரிவித்தது.

இச் சம்பவம் பெங்கோங் பகுதியில் உள்ள கோல்டன் சிட்டி கோ கார்ட் நிலையத்தில் நிகழ்ந்தது.

இதுகுறித்து இந்தோனேசியக் காவல்துறை விசாரணை நடத்துகிறது.

அந்த 33 வயது பெண்ணின் கோ கார்ட் வாகனம் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்ததாகவும் பிறகு டயர்களால் அமைக்கப்பட்ட தடுப்புகள் மீது மோதியதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

தடுப்புகள் மீது அப்பெண்ணின் கோ கார்ட் வாகனம் மோதியதில் அவரது தலைக்கவசம் வெளிவந்ததாகக் கூறப்படுகிறது.

உடனடியாக அந்த நிலையத்தின் ஊழியர் ஒருவர் அப்பெண்ணை நோக்கி விரைந்தார்.

அப்பெண்ணின் நீண்ட கூந்தல் அவரது கோ-கார்ட் வாகனத்தில் சிக்கிக்கொண்டதை அவர் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

அப் பெண் உடனடியாக அருகில் இருந்த மருந்தகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அவர் மாண்டுவிட்டதை அங்குள்ள மருத்துவர் உறுதி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset